மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால், வைகை அணையின் கீழ்பகுதியான வைகை ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காலை நிலவரப்படி வைகை ஆற்றில் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வரத்து தொடங்கியுள்ளதால், யானைக்கல், ஓபுளா படித்துறை ஆகிய தரைப்பாலங்கள் மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்

Exit mobile version