டெல்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து

டெல்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான முன்ரிகா ஃபர்னிச்சர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்நிலையில், அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மேலும் பரவியதை அடுத்து மேற்கொண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் ஏதும் வெளிவராத நிலையில், மொத்தம் 12 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Exit mobile version