கோத்தகிரி மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து … கடைகள் எரிந்து நாசம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்கெட் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பத்திற்கும் மேற்பட்ட கடைகளில் தீ பிடித்ததில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மார்கெட் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ  விபத்தினைத் தொடர்ந்து  கேத்தகிரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. 

Exit mobile version