இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நில நடுக்கம்

இந்தோனேசியாவை சக்தி வாய்ந்த நில நடுக்கம் உலுக்கியது. பீதியடைந்த பொதுமக்கள் வெட்ட வெளிகளில் தஞ்சம் புகுந்தனர்.

பாகிஸ்தானில் நேற்று முன்தினம் 5 புள்ளி 8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சீரம் தீவை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 5 ஆக பதிவாகி உள்ளது. இதனால் கட்டடங்கள், குடியிருப்புகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

Exit mobile version