தமிழக சட்டசபையில் 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது

தமிழக சட்டசபையின் நிறைவு நாளான இன்று 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் தனபால் சட்டசபையில் தெரிவித்தார். 24 முதல் 31ஆம் தேதி வரை எடுத்துக் கொள்வதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்த மானிய கோரிக்கைகளை இன்று விவாதத்திற்கும், வாக்கெடுப்பிற்கும் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும், அரசு சட்ட முன்வடிவு ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். வினாக்கள்- விடைகள் நேரம் இல்லை என்றும் ஆலுவல் ஆய்வு கூட்டம் முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து சட்டசபையின் நிறைவு நாளான இன்று 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

Exit mobile version