அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான வழக்கு: தமிழக அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கும்

இந்தியாவிலேயே மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு மட்டுமே ஆண்டிற்கு தலா 19 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் கீதாஜீவன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அண்மையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அவர், 7 லட்சத்து 40 அரசு ஊழியர்களில் 28 சதவீதம் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக சுட்டிக் காட்டினார்.

Exit mobile version