இலங்கையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது

இலங்கை முழுவதும் ஹெராயின் போதை பொருட்களை விற்பனை செய்த வங்கதேசத்தை சேர்ந்த 2 பேரை கொழும்பு போலீசார் கைது செய்தனர்.

கொழும்புவில் சட்டவிரோதமாக ஹெராயின் போதைப்பொருள் கிடங்கில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போதை பொருள் கிடங்காக செயல்பட்டு வந்த வீட்டை போலீசார் சுற்றிவளைத்தனர். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்து 336 கோடி ரூபாய் மதிப்பிலான 278 கிலோ ஹெராயின் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களில் இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version