மத்திய மண்டலத்தில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு

மத்திய மண்டலத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகர் பகுதிகளில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாநகர காவல் ஆணையர், மத்திய மண்டல காவல்துறை தலைவர், திருச்சி மற்றும் தஞ்சை சரக டிஐஜிக்கள், மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்ட காவல் கண்காணிப்பளர்கள் மற்றும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இரவு ரோந்துப் பணியையும், வாகன தணிக்கையையும் பலப்படுத்த வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது. அனுமதி பெற்ற வெடிமருந்து கடைகள் மற்றும் திருமண மண்டபங்கள், விடுதிகளில் தணிக்கை செய்யவும் அன்னிய நபர்கள், குற்றப் பின்னணி உள்ள நபர்கள் யாரேனும் உள்ளனரா என கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

Exit mobile version