புயல் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

புயல் பாதித்த புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் புயல் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கடந்த 15 நாட்களாக அமைச்சர்கள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மின்துறை, உள்ளாட்சி துறை பணியாளர்கள் புயல் சீரமைப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். புயல் பாதித்த மாவட்டங்கள் முழுவதற்கும் விரைவில் மின்விநியோகம் சீராகும் என்று அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version