ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன. இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் சென்றார். வாக்கு எண்ணும் மையத்தில் மின்சார வசதி, குடிநீர் வசதி, டேபிள், தொலைபேசி இணைப்புகள் எண்ணிக்கை, உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

வசதிகள் குறைவாக இருக்கும்பட்சத்தில் உரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார்.

Exit mobile version