தஞ்சை அரண்மனை, சரஸ்வதி மஹால் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு

தஞ்சையில் உள்ள பல்வேறு புராதான இடங்களில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இலங்கை தாக்குதலை தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதன் தொடர்ச்சியாக  தஞ்சை பெரிய கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்,  தஞ்சை அரண்மனை, சரஸ்வதி மஹால், தர்பார் ஹால், கலைக்கூடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வாளர் நாகராஜன், டிஎஸ்பி ரவிச்சந்திரன்  தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்தனர். அரண்மனை நுழைவு வாயில்கள், சரஸ்வதி மஹால் நூலகம், நுழைவாயில் மற்றும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் எண்ணிக்கை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். 

Exit mobile version