32 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவர்கள் மீண்டும் சந்திப்பு

சீர்காழி அருகே 32 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை பெருமைப்படுத்தி நினைவுப் பரிசு வழங்கிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே 32 வருடங்களுக்கு முன்பு தூய பீட்டர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்த மாணவர்கள் தற்போது, பல்வேறு அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி புத்தூரில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றது. தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு மரியாதை மற்றும் பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Exit mobile version