நாமக்கல் நாணய கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டனர்

நாமக்கல் அருகே நடைபெற்ற நாணய கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாணய கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று பார்வையிட்டனர். ஆலாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த தாமரைராஜ், 20 நாடுகளின் பழங்கால நாணயங்கள், ஸ்டாம்ப்ஸ், பழங்கால போர்க் கருவிகள், பணத்தாள்  உள்ளிட்டவைகளை சேகரித்து வைத்துள்ளார். இவற்றை பள்ளிகளுக்கு எடுத்துச்சென்று காட்சிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version