உத்தரப்பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது- அனைவரும் பாஸ்!

 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, உத்தரபிரதேசத்தில் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பிற தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.  1 முதல் 8 ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இல்லாமலேயே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version