மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்

எந்த ஒரு சூழ்நிலையிலும் மாணவ மாணவிகள் தற்கொலைக்கு முயலக் கூடாது என தெலுங்கானா மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார் மருத்துவமனையில், சிறந்த மருத்துவ சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், மாணவர்கள் வாழ்வில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். அதை திறம்பட எதிர்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் எனத் தெரிவித்தார். எந்த ஒரு சூழ்நிலையிலும் மாணவ மாணவிகள் தற்கொலைக்கு முயல கூடாது என்றும் தற்கொலை என்பது கோழைத்தனமான செயல் என்றும் குறிப்பிட்டார். மாணவ மாணவிகளுக்கு மன உறுதியும் தைரியமும் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version