குஜராத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறை வாகனங்களைத் தாக்கிய மூவாயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நேற்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த காவல்துறை வாகனங்களைப் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் தொடர்பாக மொத்தம் 3022 பேர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களில் 22 பேரை மட்டும் அடையாளம் கண்டு பெயர்கள் குறிப்பிட்டுள்ளது.

 

Exit mobile version