மாணவர் காவல் படை பயிற்சி வகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் அரசு பள்ளியில் நடைபெற்ற மாணவர் காவல் படை  பயிற்சி வகுப்பில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 44 மாணவ-மாணவியர்கள் மாணவர் காவல் படையில் இணைந்துள்ளனர். இதனையடுத்து நடந்த  அவர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாணவர் காவல் படையின் நோடல் அதிகாரி பெருமாள் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் சாலை பாதுகாப்பை கடைபிடிப்பது, தலைகவசம் அணிந்து வாகன ஓட்டுவதை வலியுறுத்துவது, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்ப்பட்டது.

Exit mobile version