1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் : தொடக்க கல்வி இயக்குநர்

தமிழ்நாட்டில் தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் செயல்படாமல் உள்ளன.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்தாண்டு 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் 12ம் வகுப்பு தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒன்று முதல் 8 வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும், பள்ளிகள் திறந்த உடன் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட இதர திட்டங்கள் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version