மாணவியரிடம் சீண்டலில் ஈடுபட்ட மாணவர்கள் : தட்டி கேட்ட ஆசிரியருக்கு தர்ம அடி

உத்தரப்பிரதேசத்தில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவர்களைத் தட்டிக் கேட்ட ஆசிரியரை, பிற மாணவர்களும் அவர்களுடன் வந்தோரும் சேர்ந்து அடித்து உதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் சாஸ்திரி நகரில் உள்ள பள்ளியில் மாணவர்கள் சிலர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த ஆசிரியர் இதைத் தட்டிக்கேட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவர்களும் அவர்களின் நண்பர்களும் கையில் தடிகளுடன் வந்து ஆசிரியரை வகுப்பறையைவிட்டு வெளியே இழுத்துப் போட்டுச் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து ஆசிரியர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களும் அவர்களுடன் வந்தவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Exit mobile version