கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாட மாணவர்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் 14,15ம் தேதிகளில் போர் கப்பல் வருகையொட்டி, கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது…

ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த வாரம் முழுவதும் கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும், டிசம்பர் 14, 15ம் தேதி கடற்படை கப்பல் வரவுள்ளது. இந்த நிலையில், 14ம் தேதி பள்ளி மாணவ, மாணவியர்கள் மட்டும் மதியம் 1 மணி முதல் 5 மணி வரை பார்வையிடலாம் எனவும், 15ம் தேதி உயர்கல்வி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பார்வையிடலாம் என கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கடற்படையினரின் வாழ்க்கை வரலாறு குறித்து கலந்துரையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பலை பார்வையிட வருபவர்கள், பள்ளி முத்திரையிட்ட பெயர் அடங்கிய பட்டியலோடும், பொதுமக்கள் ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version