இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு வர மாணவர்களுக்கு தடை

இரு சக்கர வாகனங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மோட்டார் வாகனச்சட்டப்படி 18 வயதுக்கு பூர்த்தியாகதவர்கள் இருசக்கர வாகனங்கள் இயக்குவது சட்டப்படி குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவதன் காரணமாக விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே விபத்துகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வரும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version