+2 தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் – பள்ளிக் கல்வி இயக்ககம்

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேல் நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வாளர்களுக்கான அறிவுறுத்தல்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தனித்தேர்வாளர்கள் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்களை மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் சென்று, ஆன்- லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல் நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதி வெற்றி பெறாத மாணவர்களும், முதல் முறையாக தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த தேர்வினை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 5ஆம் தேதிவரை தேர்வுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.அதேபோல், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் இது குறித்த தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

Exit mobile version