நீட் தேர்வு அச்சம் – உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி!

மதுரை தல்லாகுளம் பட்டாலியன் காவல் குடியிருப்பில் வசித்து வரும் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் ஜோதி ஸ்ரீ துர்கா. மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவரது கனவு. லட்சியத்தை எப்படியாவது எட்டிப்பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில், போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை.

எனினும் மனம் தளராத ஸ்ரீ துர்கா, இரண்டாவது ஆண்டாக இம்முறையும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். அதிக மதிப்பெண் பெற்று நிச்சயம் மருத்துவப் படிப்பில் சேர்ந்து விடலாம் என அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்.

நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், வீட்டில் தனது அறையில் ஸ்ரீ துர்கா, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவு, குடும்பத்தினரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைய வைத்துள்ளது.

Exit mobile version