மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கல்லூரி மாணவர்

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சூளைமேட்டை சேர்ந்தவர் விக்னேஷ். ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழம் ஒன்றில் பயின்று வரும் அவர் விடுமுறைக்காக சென்னை வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு வள்ளுவர் கோட்டம் அருகே மதுபோதை காரணமாக காரில் வேகமாக வந்த விக்னேஷ், சாலையோரத்தில் இருந்த ஐஸ் வண்டியில் மோதினார். ஐஸ் விற்றுவந்த சிறுவன் மணிகண்டன் காயமடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு வந்த பாண்டிபஜார் போலீசார், விக்னேஷை கைது செய்ததுடன், அவரது காரையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version