இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை ஒட்டி, இலங்கையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்ற 2009ஆம் ஆண்டு இறுதி போரின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், குறித்து இலங்கை அரசு உரிய பதிலை வழங்கவில்லை எனவும், பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள்  இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் உண்மை வெளிவரும் , இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கறையில்லையா?  என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

Exit mobile version