குடியரசு தினத்திற்காக சுற்றுலாத் தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையம், பகவதியம்மன் கோவில் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் தீவிர சோதனைகளுக்கு பிறகே சுற்றுலா தலங்களைப் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.

Exit mobile version