நக்சல்களின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் – முதலமைச்சர் பழனிசாமி

மகாராஷ்டிராவில் அதிரடிப் படையினர் மீது நக்சல்கள் நிகழ்த்தி உள்ள தாக்குதலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் அதிரடிப் படையினரின் வாகனத்தின் மீது, நக்சல்கள் நடத்திய தாக்குதலில் சி 60 கமாண்டோ படையினர் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நக்சல்களின் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், உயிரிழந்த கமாண்டோ படை வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவன், திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Exit mobile version