பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்றாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வரும் 31ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் தாள், தெர்மோக்கோல், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் போன்ற ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தடைவிதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்தந்த வார்டு அலுவலகங்களில், வரும் 31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்றாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழையிலை, காகித சுருள், மரப் பொருட்கள், காகித குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தவும், பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்கவும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாநகராடசி அறிவுறுத்தியிருக்கிறது.

 

 

Exit mobile version