சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பள்ளிக்கல்வி இயக்ககம்

கொரோனா பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், உத்தரவை மீறி சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version