விநோதமாக தனிமைப் படுத்திக் கொண்ட கொரோனா பாதித்த இளைஞர்

தெலங்கானாவில், வீட்டில் போதிய அறை இல்லாததால், கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர், விநோதமாக மரத்தின் மீது கட்டில் கட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

நலகொண்டா மாவட்டம் கொத்தனிகொண்டா கிராமத்தை சேர்ந்த சிவா என்பாவ்ருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே அறை கொண்ட வீட்டில் 3 பேருடன் வசித்து வரும் சிவா, வீட்டில் போதிய இடவசதி இல்லாததால், வீட்டின் முன் உள்ள மரத்தின் மீது கட்டிலை கட்டி அதில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவருக்கான உணவு, குடிதண்ணீர், மருந்து மாத்திரைகளை குடும்ப உறுப்பினர்கள் நேரம் தவறாமல் கயிறு கட்டி அளித்து வருகின்றனர். விநோதமாக தனிமைப் படுத்திக் கொண்ட இளைஞரின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Exit mobile version