பபுக் புயல் : தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள பபுக் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்லாந்து வளைகுடாவில் உருவான பபுக் புயல் 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்துவருவதால், இன்று அந்தமானில் கடலை கடக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கடலை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்றும் கரையை கடந்த பின்பு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் கடற்கரை நோக்கி சென்று 7 அல்லது 8 ஆம் தேதி வலுவிழக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version