திணறும் உலக நாடுகள் – இயல்பு வாழ்க்கை திரும்பி வூஹான்.!

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வூஹான் நகரில் இயல்பு வாழ்க்கை திரும்பியதால் அந்நகர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வூஹான் நகரில் வழக்கம் போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இரவு நேரங்களில் மக்கள் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து வருகின்றனர். அங்கு கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் உள்ளூரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத போதிலும் தற்போது தான் பெரும்பாலானோர் வீடுகளை விட்டு வெளியில் வந்து நேரத்தை செலவிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

Exit mobile version