ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதியளித்துள்ளார்.

கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர், கோடங்கால் பகுதியில் அரசின் நலத்திட்ட பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்கப்படமாட்டாது என்றார். தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதிமுகவின் திறமைமிக்க ஆட்சி மீது களங்கம் சுமத்த சிலர் உண்மைக்கு முரணான குற்றச்சாட்டை பதிவு செய்து வருவதாக கண்டனம் தெரிவித்தார்.

Exit mobile version