ஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும்

ஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதே நேரம் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனமும் மனுத்தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் கொண்ட அமர்வில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 7-ந் தேதியன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் நாளை இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

Exit mobile version