ஸ்டெர்லைட் வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, வேதாந்தா குழுமம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.எஃப். நரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைகோ தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Exit mobile version