மாணவர்களையும்,மீனவர்களையும் மீட்க உரிய நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பிலிப்பைன்ஸ் மற்றும் ஈரான் நாடுகளில் உள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் மீனவர்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் மற்றும் ஈரான் நாடுகளில் உள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் மீனவர்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப் பட்டது. அதற்கு பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், விமான சேவை முடங்கியுள்ள நிலையில் அனைவரையும் மீட்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கமளித்தார். மலேசியாவிலிருந்த 170 தமிழர்கள் தற்போது தனி விமானம் மூலம் விசாகப்பட்டினத்துக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version