தொழில்துறை மீண்டும் புத்துணர்வு பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர்

கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை மீண்டும் புத்துணர்வு பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஜெகதீசன், கவுரவத் தலைவர் ரத்னவேல், உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர், தொழில்துறை மீண்டும் புத்துணர்வு பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version