விலையுயர்ந்த மிதிவண்டிகளை திருடி விற்பனை செய்த டியூசன் மாஸ்டர்

விலை உயர்ந்த மிதிவண்டிகளை திருடி விற்பனை செய்து வந்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 30 மிதிவண்டிகளை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் பார்த்திபன் என்பவர் டியூசன் நடத்தி வருகிறார். இவரின் டியூசன் சென்டரின் முன் நிறுத்தி வைக்கும் விலையுயர்ந்த மிதிவண்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறையினருக்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் தான், டியூசன் ஆசிரியர் பார்த்திபன் மிதிவண்டிகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது நண்பர் லோகுராஜ் என்பவரும் கைதாகியுள்ளார். அவர்களிடம் இருந்து 30 சைக்கிள்களை போலீசார் மீட்டனர்.

Exit mobile version