விநாயகர் சதுர்த்திக்காக விற்பனைக்கு தயாராகும் சிலைகள்…..!!!!

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்ள தொழிலாளர்கள் அவற்றுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு இறுதிக்கட்டமாகத் தொழிலாளர்கள் வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விற்பனைக்கு தயாராகவுள்ள பிரமிக்க வைக்கும் விநாயகர் சிலைகள் மக்களைக் கவரும் வகையிலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version