சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு: தமிழக அரசு செய்துள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்க தயார்

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்க தயார் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் குறித்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என்ற குற்றச்சாட்டு முகாந்திரமற்றது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அப்பிரிவுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்கவும் தயார் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பணி நியமனம் தொடர்பாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.

Exit mobile version