மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்!

கேரள மாநிலத்தை சேர்ந்த சிற்பக் கலைஞர் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஆளுயர திருவுருவச் சிலையை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

இடுக்கி மாவட்டம் குமுளியை சேர்ர்ந்தவர் ஹரிக்குமார். இவர் திரு உருவச்சிலைகளை தத்ரூபமாக வடிவமைப்பதில் வல்லவர். இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவச்சிலையை அண்மையில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் வடிவமைத்து அசத்தியுள்ளார். இந்த சிலையானது தேக்கடியில் உள்ள ரோஸ் பார்க் என்ற தனியார் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

 

Exit mobile version