திமுக அரசைக் கண்டித்து 11ம் தேதி ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய போராட்டம்

திமுக அரசுக்கு எதிரான போராட்டம் 9ம் தேதிக்கு பதிலாக வரும் 11ம் தேதி நடைபெறும் என அண்ணா திமுக தலைமை அறிவித்துள்ளது.

மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து, வரும் 9 ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என அண்ணா திமுக தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், 9 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம், வரும் 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அண்ணா திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version