மாநில அளவிலான வில்வித்தை சாம்பியன்சிப் போட்டி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் ஈரோடு மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் மாநில அளவிலான வில்வித்தை சாம்பியன்சிப் போட்டி நடைபெற்றது. கன்னியாகுமரி, சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம், சேலம்,ஈரோடு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இருந்து சுமார் 360 மாணவ,மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு விளையாடினர். இறுதியில் அனைத்து பிரிவுகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தட்டிச்சென்றனர். அவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

Exit mobile version