திருவாரூரில் நடைபெற்ற மாநில ஜூனியர் வாலிபால் போட்டிகள்

ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணியும், பெண்கள் பிரிவில் சென்னை அணியும், ஆந்திராவில் நடைபெற உள்ள தேசிய வாலிபால் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

திருவாரூரில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான, மாநில ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. திருவாரூர் கைப்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 60 அணிகள் கலந்து கொண்டன.

இதில், ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணியும், பெண்கள் பிரிவில் சென்னை அணியும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தன. இதன்மூலம், இந்த இரண்டு அணிகளும், தேசிய ஜூனியர் வாலிபால் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள தேசிய ஜூனியர் வாலிபால் போட்டியில், தமிழகத்தின் சார்பில் திருவாரூர் ஆண்கள் அணியும், சென்னை பெண்கள் அணியும் பங்கேற்கவுள்ளது.  

 

Exit mobile version