கேரளாவில் அமைதியை நிலைநாட்ட மாநில ஆளுநர் சதாசிவம் அறிவுறுத்தல்

கேரளாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அம்மாநில ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிவுறுத்தியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மரபில் இருந்து மாறுபட்டு, அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதற்கிடையே அண்மையில் 2 பெண்கள் சுவாமிதரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இதுகுறித்து எழுந்த புகார்களுக்கு கேரள ஆளுநர் சதாசிவம், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிக்கை கேட்டுள்ளார். மேலும் அவர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version