மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று கடைப்பிடிப்பு

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இன்றைய தினம் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவ மாணவிகள்  உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version