நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேர்தல் தொடர்பாக டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் அனைத்து தேர்தல் பணிகளையும், முடித்து அறிவிப்பானை வெளியிட உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தேர்தலுக்கான முன் ஏற்பாடு பணிகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கு பெறும் இக்கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version