உள்ளாட்சி தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

காவல்துறை உயர் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. உயர் கல்வி, பள்ளிக் கல்வி, காவல்துறை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.  

Exit mobile version