ஆகஸ்ட் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணையம்

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 2-வது வாரத்திற்குள் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முழுவதுமாக நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும், கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version