அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

உள்ளாட்சித் தேர்தலையொட்டி பொது இடங்களில் பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரையவும், சுவரொட்டிகள் ஒட்டவும் அரசியல் கட்சியினருக்கு, மாநில தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, வீட்டு உரிமையாளரின் அனுமதி இருந்தாலும், சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

பிரசார வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை, காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு, ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என்றால், காவல்துறையினரிடம் முன் அனுமதியை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பயன்படுத்தும் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பயன்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

Exit mobile version